Sunday, May 16, 2010

Thoughts

CUT YOUR THOUGHTS
CUT YOUR EMOTIONS
CUT YOUR ILL FEELINGS
CUT DOWN YOUR SPEECH
CUT DOWN YOUR EXCESSIVE EATING

PUT YOUR BODY INTO ACTION
PUT YOUR FAITH IN GOD

SET YOUR MIND IN ORDER

BET YOU WILL BECOME GREAT
BET EVERY ONE WILL ADMIRE YOU
BET NO ONE CAN EXCEL YOU
BET YOUR BRILLIANCE WILL SHINE
BET GLORY OF GOD WILL PROTECT YOU
NUTSHELL OF THESE LINES IS
CUT PUT SET HAVE AWAKENED IN YOU
DIVINE GLORY BEYOND ALL LIMITS

Humour in Divinity

ஹாஸ்யத்தில் காவ்யம்

கரைத்த மோர் நல்லதா கட்டித்தயிர் நல்லதா
உரைத்த வைரம் நல்லதா உரைக்காத கல் நல்லதா
நரைத்த தாடி நல்லதா நரயாத மீசை நல்லதா
குரைக்கும் நாய் கடிக்குமா குரைக்காத நாயை நம்பவா
வரைத்த கோடு தாண்டாதே என்றான் இலக்குமணன்
உரைத்த வாக்கை கேளாமல் தேவி கோடு தாண்டினாள்
மறைத்த மேனியுடன் சன்யாசி ரூபத்தில் இராவணன்
இறைப்போருளாம் தேவியை கொண்டு சென்றான் அரக்கன்
யார் சொல்லையும் கேளாத அரக்கன் வினை தேடினான்
பார்புகழும் இராகவன் அவதரித்த காரணம் கைகூட
தவங்கள் பல புரிந்து வரம் பெர்ட்ட இராவணன்
தர்மத்தை கார்ட்டில் பறக்க விட்டான் கர்வத்துடன்
நாம் அடைந்த காவியம் இராமாயணம்
ஸ்ரீராம அவதாரத்தில் பரம்பொருளாய் தோன்றி
தர்மத்தை காக்கவே வந்த தயாநிதி
இராவணன் தர்மத்தை நழுவ விட்டான்
இராமன் அரக்கனை வதம் செய்தான்
தர்மத்தை நிலைநாட்டினான் ரகுகுல பராக்ராமன்
இராமாயண காவ்யம் ஒன்றே போதும் நம்மை உய்விக்க
ஸ்ரீராம் ஜெயராம் ஜயஜய ராம்

Thursday, August 20, 2009

Lord Krishna-the Magic Lord

கண்டதெல்லாம் கனவா நனவா
உண்பதெல்லாம் உணவா விடமா
எண்ணுவதெல்லாம் நன்மையா தீமையா
பண்ணுவதெல்லாம் பாவமா புண்ணியமா
திண்ணமாய் கூற மணத்திடம் வேண்டும்
கண்ணனிடம் அளவுகடந்த பக்தி வேண்டும்
காணமுடியாசெல்வம் நமக்களிப்பான்
ஆணவம் வேண்டாம் பொறாமை வேண்டாம்
அதிகாசை வேண்டாம் காமக்ரோதம் வேண்டாம்
அன்புதான் வேண்டும் அளவிலா அன்புதான் வேண்டும்

Life's Mission

கடுகடுப்பான வார்த்தைகள் பேசாதே
சுடுவேநீர் பட்டால் சுடும் புண்ணைவிட
சுட்டபுண் ஆறாது நாவினால் சுட்டுவிட்டால்
தடுப்பது நம் கையில்தான் என்பதுஅறிவாய்
தடுமாடும் நிலையில் தள்ளுவதும் நாமே
எடுத்த காரியத்தில் வெற்றி காண்பதும் நாமே
உடுக்கும் உடையும் உண்ணும் உணவையும் நிலையில் வைப்போம்
அடுத்த அன்பருக்கு உதவிகள் பல செய்திடுவோம்
அடுத்த வாழ்விலல்ல இப்பிறவிலேயே முக்தியாளிப்பன் கந்தன்

Tuesday, June 23, 2009

Poer of Maya (Illusion)

கணக்கில்லா பிறவி எடுத்தும்
மாயையில் உழன்று தவிக்கும்
மானிட வாழ்விற்கு விடுதலை
மனம் மாற்றி நின் பதம் பிடித்திட
மறைப்பொருளே நீ அளித்திடுவாய்
கணக்கில்லா பிறவியின் பலன்
நான் அடைந்தேன் நம்பியே
நன்மை பயக்கும் ஜகதீசனே

Our goal in Life

அலைகள் மோதிடும் ஆர்ட்டலை கண்டேன்
வலைவீசி மீன்பிடிக்கும் வண்ணமும் கண்டேன்
உலைவைத்து உணவு படைக்கும் உண்மையை கண்டாயா
இலையிலிருந்து இன்பமாய் உண்டிடும் பண்டங்கள் தோன்றியது
மலைமாருதக்கண்ணன் மணிவண்ணன் அருளாலன்ரோ
கலைகளெல்லாம் பயின்று கற்பனைகள் தீட்டியும்
ஓலைகளிளிருக்கும் உன்னத காவியம் கண்டும்
ஆலைகளில் உழைத்திடும் ஏழைகளின் நிலையை உணர்ந்தோமா
வேலையின்றி வேதனையில் தவித்திடும் மானிடர் கணக்கிலார்
சாலைஒரங்களில் பிச்சை எடுக்கும் பாவங்கள் எத்தனை
காலையும் மாலையும் இவற்றை எண்ணி உள்ளத்தில் உன்னிடுவோம்
பாலைவனம் சென்று பசியினில் வாடினால் இதன் உண்மை புரியும்
வேலைஎந்தி நம்மைகாத்திடும் கந்தனைபாடிடுவோம்
வேலனின் வேலை எண்ணுவதைவிட நமக்கு வேறென்ன வேலை
காலனை உதைத்திட்ட மகேசன் சூலம்யேந்தி வந்திடுவான்
மண்ணும் விண்ணும் காத்திடும் திருமாலும் நம்முள் தோன்றிடுவான்

God is always with us

இனிப்பதெல்லாம் தின்பண்டம் என்றுஎன்னாதே
இனிமையை வாழ்க்கையில் தேடிடும் மானிடரே
இன்னா சொல்லாமை இனிமை பயக்கும் இதயம் குளிரும்
இன்பமே வேண்டும் என்றாலும் துன்பமும் சகிக்கவெண்டும்
இன்பதுன்பம் நாணயத்தின் இருபக்கம் அல்லவா
இனிய வாக்கு சொல்லுவோம் இரக்கம் மனதில் கொள்ளுவோம்
இனியாவது மனிதவாழ்வு அனைவரையும் மதித்தல் என்று உணர்வோம்
தனித்து உலகில் தோன்றினாலும் தனிமை மிகக்கடினம்
அனைத்துலகையும் படைத்த இறைவன் அன்பையே பொழிகிறான்
அன்பர்களோடு பழகுவோம் அண்ணன் அண்ணி என்று எண்ணுவோம்
துன்பமெலாம் மறைந்து விடும் துயரமும் நீங்கிவிடும்
கண்ணன் கருணை திண்ணமாய் கிட்டிடும் ஐயமில்லை
ஓம் குருவயூரப்பா சரணம் ஓம் ஓம் ஓம்