கணக்கில்லா பிறவி எடுத்தும்
மாயையில் உழன்று தவிக்கும்
மானிட வாழ்விற்கு விடுதலை
மனம் மாற்றி நின் பதம் பிடித்திட
மறைப்பொருளே நீ அளித்திடுவாய்
கணக்கில்லா பிறவியின் பலன்
நான் அடைந்தேன் நம்பியே
நன்மை பயக்கும் ஜகதீசனே
Tuesday, June 23, 2009
Our goal in Life
அலைகள் மோதிடும் ஆர்ட்டலை கண்டேன்
வலைவீசி மீன்பிடிக்கும் வண்ணமும் கண்டேன்
உலைவைத்து உணவு படைக்கும் உண்மையை கண்டாயா
இலையிலிருந்து இன்பமாய் உண்டிடும் பண்டங்கள் தோன்றியது
மலைமாருதக்கண்ணன் மணிவண்ணன் அருளாலன்ரோ
கலைகளெல்லாம் பயின்று கற்பனைகள் தீட்டியும்
ஓலைகளிளிருக்கும் உன்னத காவியம் கண்டும்
ஆலைகளில் உழைத்திடும் ஏழைகளின் நிலையை உணர்ந்தோமா
வேலையின்றி வேதனையில் தவித்திடும் மானிடர் கணக்கிலார்
சாலைஒரங்களில் பிச்சை எடுக்கும் பாவங்கள் எத்தனை
காலையும் மாலையும் இவற்றை எண்ணி உள்ளத்தில் உன்னிடுவோம்
பாலைவனம் சென்று பசியினில் வாடினால் இதன் உண்மை புரியும்
வேலைஎந்தி நம்மைகாத்திடும் கந்தனைபாடிடுவோம்
வேலனின் வேலை எண்ணுவதைவிட நமக்கு வேறென்ன வேலை
காலனை உதைத்திட்ட மகேசன் சூலம்யேந்தி வந்திடுவான்
மண்ணும் விண்ணும் காத்திடும் திருமாலும் நம்முள் தோன்றிடுவான்
வலைவீசி மீன்பிடிக்கும் வண்ணமும் கண்டேன்
உலைவைத்து உணவு படைக்கும் உண்மையை கண்டாயா
இலையிலிருந்து இன்பமாய் உண்டிடும் பண்டங்கள் தோன்றியது
மலைமாருதக்கண்ணன் மணிவண்ணன் அருளாலன்ரோ
கலைகளெல்லாம் பயின்று கற்பனைகள் தீட்டியும்
ஓலைகளிளிருக்கும் உன்னத காவியம் கண்டும்
ஆலைகளில் உழைத்திடும் ஏழைகளின் நிலையை உணர்ந்தோமா
வேலையின்றி வேதனையில் தவித்திடும் மானிடர் கணக்கிலார்
சாலைஒரங்களில் பிச்சை எடுக்கும் பாவங்கள் எத்தனை
காலையும் மாலையும் இவற்றை எண்ணி உள்ளத்தில் உன்னிடுவோம்
பாலைவனம் சென்று பசியினில் வாடினால் இதன் உண்மை புரியும்
வேலைஎந்தி நம்மைகாத்திடும் கந்தனைபாடிடுவோம்
வேலனின் வேலை எண்ணுவதைவிட நமக்கு வேறென்ன வேலை
காலனை உதைத்திட்ட மகேசன் சூலம்யேந்தி வந்திடுவான்
மண்ணும் விண்ணும் காத்திடும் திருமாலும் நம்முள் தோன்றிடுவான்
God is always with us
இனிப்பதெல்லாம் தின்பண்டம் என்றுஎன்னாதே
இனிமையை வாழ்க்கையில் தேடிடும் மானிடரே
இன்னா சொல்லாமை இனிமை பயக்கும் இதயம் குளிரும்
இன்பமே வேண்டும் என்றாலும் துன்பமும் சகிக்கவெண்டும்
இன்பதுன்பம் நாணயத்தின் இருபக்கம் அல்லவா
இனிய வாக்கு சொல்லுவோம் இரக்கம் மனதில் கொள்ளுவோம்
இனியாவது மனிதவாழ்வு அனைவரையும் மதித்தல் என்று உணர்வோம்
தனித்து உலகில் தோன்றினாலும் தனிமை மிகக்கடினம்
அனைத்துலகையும் படைத்த இறைவன் அன்பையே பொழிகிறான்
அன்பர்களோடு பழகுவோம் அண்ணன் அண்ணி என்று எண்ணுவோம்
துன்பமெலாம் மறைந்து விடும் துயரமும் நீங்கிவிடும்
கண்ணன் கருணை திண்ணமாய் கிட்டிடும் ஐயமில்லை
ஓம் குருவயூரப்பா சரணம் ஓம் ஓம் ஓம்
இனிமையை வாழ்க்கையில் தேடிடும் மானிடரே
இன்னா சொல்லாமை இனிமை பயக்கும் இதயம் குளிரும்
இன்பமே வேண்டும் என்றாலும் துன்பமும் சகிக்கவெண்டும்
இன்பதுன்பம் நாணயத்தின் இருபக்கம் அல்லவா
இனிய வாக்கு சொல்லுவோம் இரக்கம் மனதில் கொள்ளுவோம்
இனியாவது மனிதவாழ்வு அனைவரையும் மதித்தல் என்று உணர்வோம்
தனித்து உலகில் தோன்றினாலும் தனிமை மிகக்கடினம்
அனைத்துலகையும் படைத்த இறைவன் அன்பையே பொழிகிறான்
அன்பர்களோடு பழகுவோம் அண்ணன் அண்ணி என்று எண்ணுவோம்
துன்பமெலாம் மறைந்து விடும் துயரமும் நீங்கிவிடும்
கண்ணன் கருணை திண்ணமாய் கிட்டிடும் ஐயமில்லை
ஓம் குருவயூரப்பா சரணம் ஓம் ஓம் ஓம்
Subscribe to:
Posts (Atom)
