ஹாஸ்யத்தில் காவ்யம்
கரைத்த மோர் நல்லதா கட்டித்தயிர் நல்லதா
உரைத்த வைரம் நல்லதா உரைக்காத கல் நல்லதா
நரைத்த தாடி நல்லதா நரயாத மீசை நல்லதா
குரைக்கும் நாய் கடிக்குமா குரைக்காத நாயை நம்பவா
வரைத்த கோடு தாண்டாதே என்றான் இலக்குமணன்
உரைத்த வாக்கை கேளாமல் தேவி கோடு தாண்டினாள்
மறைத்த மேனியுடன் சன்யாசி ரூபத்தில் இராவணன்
இறைப்போருளாம் தேவியை கொண்டு சென்றான் அரக்கன்
யார் சொல்லையும் கேளாத அரக்கன் வினை தேடினான்
பார்புகழும் இராகவன் அவதரித்த காரணம் கைகூட
தவங்கள் பல புரிந்து வரம் பெர்ட்ட இராவணன்
தர்மத்தை கார்ட்டில் பறக்க விட்டான் கர்வத்துடன்
நாம் அடைந்த காவியம் இராமாயணம்
ஸ்ரீராம அவதாரத்தில் பரம்பொருளாய் தோன்றி
தர்மத்தை காக்கவே வந்த தயாநிதி
இராவணன் தர்மத்தை நழுவ விட்டான்
இராமன் அரக்கனை வதம் செய்தான்
தர்மத்தை நிலைநாட்டினான் ரகுகுல பராக்ராமன்
இராமாயண காவ்யம் ஒன்றே போதும் நம்மை உய்விக்க
ஸ்ரீராம் ஜெயராம் ஜயஜய ராம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment