Sunday, May 16, 2010

Humour in Divinity

ஹாஸ்யத்தில் காவ்யம்

கரைத்த மோர் நல்லதா கட்டித்தயிர் நல்லதா
உரைத்த வைரம் நல்லதா உரைக்காத கல் நல்லதா
நரைத்த தாடி நல்லதா நரயாத மீசை நல்லதா
குரைக்கும் நாய் கடிக்குமா குரைக்காத நாயை நம்பவா
வரைத்த கோடு தாண்டாதே என்றான் இலக்குமணன்
உரைத்த வாக்கை கேளாமல் தேவி கோடு தாண்டினாள்
மறைத்த மேனியுடன் சன்யாசி ரூபத்தில் இராவணன்
இறைப்போருளாம் தேவியை கொண்டு சென்றான் அரக்கன்
யார் சொல்லையும் கேளாத அரக்கன் வினை தேடினான்
பார்புகழும் இராகவன் அவதரித்த காரணம் கைகூட
தவங்கள் பல புரிந்து வரம் பெர்ட்ட இராவணன்
தர்மத்தை கார்ட்டில் பறக்க விட்டான் கர்வத்துடன்
நாம் அடைந்த காவியம் இராமாயணம்
ஸ்ரீராம அவதாரத்தில் பரம்பொருளாய் தோன்றி
தர்மத்தை காக்கவே வந்த தயாநிதி
இராவணன் தர்மத்தை நழுவ விட்டான்
இராமன் அரக்கனை வதம் செய்தான்
தர்மத்தை நிலைநாட்டினான் ரகுகுல பராக்ராமன்
இராமாயண காவ்யம் ஒன்றே போதும் நம்மை உய்விக்க
ஸ்ரீராம் ஜெயராம் ஜயஜய ராம்

No comments: